இந்தியாவில் ஒருநாளில் மேலும் 34,457 பேருக்கு கொரோனா; 375 பேர் உயிரிழப்பு
1 min read
Corona for another 34,457 people a day in India; 375 casualties
21/8/2021
இந்தியாவில் ஒருநாளில் மேலும் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 375 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்திய கொரோனா நிலவரம் பற்றி நேற்று காலையில் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் நேற்று 34,457 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,23,93,286 ஆனது.
மேலும், 36,347 பேர் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா. இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,15,97,982 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது,3,61,340 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
375 பேர் சாவு
நேற்று கொரோனா காரணமாக 375 பேர் இறந்தனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,33,964 ஆக அதிகரித்தது.
இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.