23-ந் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி; 1-ந் தேதி முதல் மதிய உணவு திட்டம் செயல்படலாம்
1 min read
Permission to open theaters from 23rd; The lunch program may be operational from the 1st
21.8.2021
வருகிற 23-ந் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. செப்டம்பர் 1-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்க அனுமதித்துள்ளது. மதிய உணவு திட்டமும் செயல்படலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:
நீட்டிப்பு
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது. தற்போதைய ஊரடங்கு வரும் 23ம் தேதி உடன் முடிவடைய நிலையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு வரும் செப்டம்பர் 6-ந் தேதி வரையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ அரசு பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு,
தியேட்டர்கள்
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கின் போது, வருகிற 23-ந் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்படுகிறது.
அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரையில் இயங்க அனுமதி
கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி. பூங்காக்கள் படகு இல்லங்கள் இயங்க அனுமதி கடற்கரை கடைகளின் பணியாளர்கள் சிறுவியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதிய உணவு திட்டம்
செப்டம்பர் 1-ந் தேதி முதல் அங்கன்வாடி மையங்கள் மதிய உணவு வழங்குவதற்கு அனுமதி. மழலையர் காப்பகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. அதேநேரம் பொறுப்பாளர்கள், மற்றும் பணியாளர்கள் தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும்.
உரிய வழிகாட்டு நெறி முறைகளின் படி மதிய உணவு திட்டம் செயல்பட அனுமதி
ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது போக்குவரத்திற்கு அனுமதி. நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி பேருந்துகளை இயக்க வேண்டும்.
தங்கும் விடுதிகள் கேளிக்கை விடுதிகளில் உள்ள மது கூடங்கள் செயல்பட அனுமதி
பள்ளி, கல்லூரிகள்
செப்டம்பர் 1-ந் தேதி முதல் கல்லூரி மற்றும் அனைத்து பட்டய படிப்புகல்லூரிகள் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகளுக்கு அனுமதி
செப்டம்பர் 1-ந் தேதி முதல் 9,10,11,12 ம் வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தப்படும் ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
எல்.கே.ஜி., முதல் முதல் 8 வது வரையிலான வகுப்புகளை திறப்பது குறித்து செப்டம்பர் 15-ந் தேதிக்கு பின்னர் ஆலோசித்து அறிவிக்கப்படும்.
ஐ.டி. நிறுவனங்கள்
100 சதவீத பணியாளர்களுடன் ஐ.டி., நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.