தமிழ்நாட்டில் இன்று 1,639 பேருக்கு கொரோனா; 23 பேர் உயிரிழப்பு
1 min read
na for 1,639 people in Tamil Nadu today; 23 dead
22.8.2021
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,652 -ல் இருந்து 1,630 ஆக குறைந்துள்ளது. 23 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,827 பேர் குணமடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழ்நாட்டில் 1,55,607 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில்,1,630 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,00,885 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 931 பேர் ஆண்கள், 699 பேர் பெண்கள்.
இன்று 1,827 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,47,005 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 23 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 34,709 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 183 ஆக இருந்த நிலையில் இன்று (22ம் தேதி) 177 ஆக குறைந்துள்ளது.
கோவையில் இன்று 198 பேருக்கும், ஈரோட்டில் 146 பேருக்கும், தஞ்சாவூரில் 108 பேருக்கும், செங்கல்பட்டில் 82 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. நேற்று அதிகபட்சமாக சென்னையில் 4 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். திருவள்ளூரில் 2 பேரும், தஞ்சை, திருப்பூரில் தலா 2 பேரும் இறந்துள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
நெல்லையில் இன்று 13 பேருக்கும், தென்காசியி்ல் 6 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் 11 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் இறந்துள்ளார்.