கொரோனா 3-வது அலை அக்டோபரில் உச்சமடையும்
1 min read
Corona 3rd wave will peak in October
24.8.2021
இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை உச்சமடைவது எப்போது என்பது குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா 3-வது அலை
இந்தியாவில் இன்று காலை கடந்த 24 மணிநேரத்தில் 25,072 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,24,49,306 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3,33,924 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தற்போது மெல்ல குறைந்து வரும் நிலையில் கொரோனாவின் 3-வது அலை ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது.
அறிக்கை
அந்த வகையில், இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை எப்போது உச்சமடையும் என்பது குறித்த அறிக்கை பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு பிரதமர் அலுவலகத்திடம் சர்ப்பித்துள்ள அறிக்கையில் இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் உச்சமடையலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.