June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 25,072 பேருக்கு கொரோனா
389 பேர் உயிரிழப்பு

1 min read

Corona for 25,072 newcomers in India 389 casualties

23.8.2021
இந்தியாவில் புதிதாக 25,072 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.389 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா

நாட்டில் கொரோனா 2வது அலையில் பாதிப்புகளின் தீவிரம் சமீப காலங்களாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை கடந்த 24 மணிநேரத்தில் 25,072 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. நேற்று 30,948 பேரும் நேற்றைக்கு முந்தைய நாள் 34,457 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவைகளை ஒப்பிடும்போது இன்று தொற்று குறைந்துள்ளது. இதுவரை கொரோனாவால் கொரோனால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,24,49,306 ஆக உயர்வடைந்து உள்ளது.

389 பேர் சாவு

இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் 389 பேர் உயிரிழந்து உள்ளனர். இது நேற்றைய உயிரிழப்பு 403 ஆக இருந்தது. இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,34,756 ஆக உயர்ந்து உள்ளது.

ஒரேநாளில் 44,157 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3,16,80,626 ஆக உயர்வடைந்து உள்ளது. தற்போது நாடு முழுவதும் 3 லட்சத்து 33 ஆயிரத்து 924 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.