தமிழகத்தில் இன்று 1,585 பேருக்கு கொரோனா; 27 பேர் சாவு
1 min read
+++++++++
24.8.2021
தமிழகத்தில் இன்று புதிதாக 1,585 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 27 பேர் இறந்துள்ளனர்.
1,585 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று 1,585 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26,04,074 ஆக உயர்ந்துள்ளது.
இறப்பு விவரம்
இன்று கொரோனாவுக்கு 27 பேர் உயிரிழந்துள்ளனர். இததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,761 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூரில் இன்று 5 பேர் இறந்துள்ளனர். கோவையில் 4 பேரும், சென்னையில் 3 பேரும், செங்கல்பட்டு, கடலூர், தர்மபுரி, பெரம்பலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், திருவள்ளூர், திருவண்ணமாலை, திருவாரூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் இறந்துள்ளனர்.
அதே சமயம் ஒருநாளில் 1,842 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,50,710 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 18,603 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 1,50,911 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 172 ஆக இருந்த நிலையில் இன்று 165 ஆக குறைந்துள்ளது.
கோவையில் 190 பேருக்கும், ஈரோட்டில் 138 பேருக்கும். தஞ்சாவூரில் 98 பேருக்கும், செங்கல்பட்டில் 92 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் 10 பேருக்கும், தென்காசியில் 5 பேருக்கும், தூத்துக்குடியில் 10 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.