இந்தியாவில் புதிதாக 25,467 பேருக்கு கொரோனா்; 354 பேர் உயிரிழப்பு
1 min read
Corona to 25,467 newcomers in India; 354 fatalities
24.8.2021
இந்தியாவில் புதிதாக 25,467 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 354 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
கொரோனா 2-வது அலை
நாட்டில் கொரோனா 2வது அலையில் பாதிப்புகளின் தீவிரம் சமீப காலங்களாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், ஒன்றிய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் 25,467 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.
இந்த எண்ணிக்கை நேற்று 25,072 ஆகவும், ஞாயிற்றுக்கிழமை 30,948, சனிக்கிழமை 34,457 ஆகவும் பதிவாகி இருந்தது. முந்தின நாள் பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது நேற்று தொற்று சற்று உயர்ந்து உள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 3,24,74,773 ஆக உயர்வடைந்து உள்ளது.
354 பேர் சாவு
இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் 354 பேர் உயிரிழந்து உள்ளனர். இது நேற்று 389 ஆகவும், ஞாயிற்றுக்கிழமை 403 ஆகவும் இருந்தது. இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,35,110 ஆக உயர்ந்து உள்ளது.
இதேபோன்று 39,486 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3,17,20,111 ஆக உயர்வடைந்து உள்ளது. நாடு முழுவதும் 3 லட்சத்து 19 ஆயிரத்து 551 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் 63,85,298 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால், இதுவரை மொத்தம் 58 கோடியே 89 லட்சத்து 97 ஆயிரத்து 805 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன.