ஆப்கானிஸ்தான் மக்கள் இந்தியா வர இ- விசா கட்டாயம்; மத்திய அரசு அறிவிப்பு
1 min read
Afghans forced to come to India with e-visa; Federal Government Notice
25/8/2021
ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் இ- விசா மூலம் மட்டுமே இந்தியாவுக்கு வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து அந்நாட்டை தலீபான்கள் கைப்பற்றியுள்ளன. மேலும், ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளை தலீபான்கள் தீவிரப்படுத்தியுள்ளன.
இதற்கிடையில், ஆப்கானிஸ்தானின் சிக்கியுள்ள தங்கள் நாட்டை சேர்ந்தவர்களை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த மீட்பு நடவடிக்கைகளுக்காக காபூல் விமான நிலையத்தை அமெரிக்க படையினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது.
இ-விசா
இந்நிலையில், இந்திய விமானப்படை விமானம் தொடர்ந்து அங்கிருந்து இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த விமானத்தில் இந்தியர்கள் அல்லாமல் ஆப்கானை சேர்ந்த இந்துக்களும், சீக்கியர்களும் அகதிகளாக இந்தியாவுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அந்நாட்டு மக்கள் அதிகமான அளவு இந்தியாவுக்கு வர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் இ -விசா மூலம் மட்டுமே இந்தியாவுக்கு வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியா வர விரும்பும் ஆப்கானிஸ்தானிய மக்கள் இதற்கான இணையதளத்தில் இ-விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.