தடுப்பூசி இடைவெளி நீட்டிக்கப்பட்டதற்கு பற்றாக்குறை காரணமா?; – கேரள உயர் நீதிமன்றம் கேள்வி
1 min read
Is the deficiency the reason for the extension of the vaccine interval ?; – Question by the Kerala High Court
25/8/2021
‘கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியின் இரு ‘டோஸ்’ இடைவெளி 84 நாட்களாக நீட்டிக்கப்பட்டதன் காரணம், பற்றாக்குறையா அல்லது செயல்திறனா’ என, கேரள உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
தடுப்பூசி இடைவெளி
கேரளாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம், தன் 5,000 பணியாளர்களுக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகளை ஏற்கனவே செலுத்தியது. ‘அரசின் காலவரம்பு நீட்டிப்பு காரணமாக, அவர்களுக்கு இரண்டாவது டோஸ் செலுத்த முடியவில்லை’ என, கொச்சி உயர் நீதிமன்றத்தில் அந்நிறுவனம் மனு தாக்கல் செய்தது.
மனு ஏற்கனவே விசாரிக்கப்பட்ட போது, ‘கோவிஷீல்டு இரு டோஸ்களுக்கு இடையே முதலில் நான்கு வார இடைவெளி அறிவிக்கப் பட்டது. பின் 84 நாட்களாக உயர்த்தப்பட்டது ஏன்?’ என, மத்திய – மாநில அரசு களுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘கால இடைவெளி தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறோம்’ என, மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி உத்தரவிட்டதாவது:-
பற்றாக்குறையா?
இரு டோஸ்களுக்கான இடைவெளி, தடுப்பூசியின் செயல்திறன் அடிப்படையிலானது என்றால் அதனை அனைவரும் ஏற்க வேண்டும். ஆனால் பற்றாக்குறை காரணமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடைவெளி நீட்டிக்கப்பட்டு இருந்தால், தடுப்பூசியை வாங்க முடிந்தவர்கள் 84 நாட்கள் காத்திருக்காமல் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
கால நீட்டிப்பு செயல்திறன் அடிப்படையிலானது எனில் அதற்கான அறிவியல் ஆதாரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தர விட்டார். இது குறித்த தகவல்களை அளிக்க, ஒன்றிய அரசு வழக்கறிஞர் அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.