தமிழகத்தில் இன்று 1,573 பேருக்கு கொரோனா; 27 பேர் சாவு
1 min read
orona for 1,573 people in Tamil Nadu today; 27 deaths
25.8.2021
தமிழகத்தில் இன்று 1,573 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பேர் இறந்தனர். 27 பேர் இறந்துள்ளனர்.
1,573 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26,05,647 ஆக உயர்ந்துள்ளது.
27 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 27 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,788 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 1,797 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,52,507 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 18,352 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,56,985 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள மாவட்டங்கள் வருமாறு:-
கோவை – 181, சென்னை – 170, ஈரோடு – 130, செங்கல்பட்டு – 90, தஞ்சாவூர் – 84
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
நெல்லையில் இன்று 7 பேருக்கும், தென்காசியில் 9 பேருக்கும், தூத்துக்குடியில் 14 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.