தமிழகத்தில் இன்று 1,559 பேருக்கு கொரோனா; 26 பேர் பலி
1 min read
Corona for 1,559 people in Tamil Nadu today; 26 people were killed
26/8/2021
தமிழகத்தில் புதிதாக 1,559 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இன்று 26 பேர் பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று 1,559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26,07,206 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் தமிழகத்தில் 26 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,814 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 1,816 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,54,323 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 18,069 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 1,60,911 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள மாவட்டங்கள்:-
கோவை – 216, சென்னை – 175, ஈரோடு – 115, செங்கல்பட்டு – 113, திருவள்ளூர் – 77, திருப்பூர் – 73, சேலம் – 65
நெல்லை இன்று 18 பேருக்கும் தென்காசியில் 8 பேருக்கும், தூத்துக்குடியில் 17 பேருக்கும் இன்று கொரோனா கண்டிறயப்பட்டு உள்ளது.