இந்தியாவில் ஒருநாளில் 46,164 பேருக்கு கொரோனா; 607 பேர் சாவு
1 min read
Corona for 46,164 people a day in India; 607 deaths
26.8.2021
இந்தியாவில் ஒருநாளில் 46,164 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 607 பேர் உயிரிழந்தனர்.
கொரோனா அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் கணிசமாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இந்தியாவில் நேற்று 37,593 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 46,164 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 25 லட்சத்து 58 ஆயிரத்து 530 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 33 ஆயிரத்து 725 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று காலைவரை கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 34 ஆயிரத்து 159 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 17 லட்சத்து 88 ஆயிரத்து 440 ஆக அதிகரித்துள்ளது.
607 பேர் சாவு
ஆனாலும், ஒரே நாளில் கொரோனா தாக்குதலுக்கு 607 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 36 ஆயிரத்து 365 ஆக அதிகரித்துள்ளது.