தமிழகத்தில் இன்று 1,562 பேருக்கு கொரோனா; 20 பேர் சாவு
1 min read
Corona for 1,562 people in Tamil Nadu today; 20 dead
2.9.2021
தமிழகத்தில் இன்று கெரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,509 -ல் இருந்து 1,562 ஆக சற்று அதிகரித்துள்ளது. 20 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ‘
தமிழகத்தில் 1,60,523 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில்,தமிழகத்தை சேர்ந்த 1,561 பேர் மற்றும் ஐக்கிய அரபு நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு என மொத்தம் 1,562 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது.
இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,17,943ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 890 பேர் ஆண்கள், 672 பேர் பெண்கள். இன்று 1,684 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,66,504 ஆக உயர்ந்துள்ளது.
20 பேர் சாவு
தமிழகத்தில் 20 பேர் இன்று கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இன்று கோவையில் 5 பேர் இறந்துள்ளனர். சென்னை, திருவள்ளூர், வேலூர், தர்மபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், மதுரை, சேலம், திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இறந்துள்ளனர்.
அதில், 7 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 13 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,961 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 177 ஆக இருந்த நிலையில் இன்று (02ம் தேதி) 166 ஆக குறைந்துள்ளது.
கோவையில் இன்று 215 பேருக்கும், ஈரோட்டில் 132 பேருக்கும், தஞ்சையில் 110 பேருக்கும், செங்கல்பட்டில் 103 பேருக்கும், திருப்பூரில் 90 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை
நெல்லையில் இன்று 7 பேருக்கும், தென்காசியில் 7பேருககும், தூத்துக்குடியில் 10 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் இன்று கொரோனாவுக்கு ஒருவர் இறந்துள்ளார்.