தமிழகத்தில் மேலும் 1,568 பேருக்கு கொரோனா; 9 பேர் சாவு
1 min read
Corona for another 1,568 in Tamil Nadu; 9 deaths
3.9.2021
தமிழகத்தில் இன்று 1,568 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 19 பேர் இறந்துள்னர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் குறைந்து கொண்டு வந்த பாதிப்பு 6 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்ந்துள்ளது. அந்தவகையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,562இல் இருந்து 1,568 ஆக அதிகரித்துள்ளது. 1,60,742 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,568 ஆக உள்ளது.
இதில், தமிழகத்தை சேர்ந்த 1,563 பேர். கேரளாவிலிருந்து இருந்து வந்த 5 பேர்.
கொரோனாவில் இருந்து இன்று 1,657 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,68,161 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 16,370 ஆக உள்ளது.
19 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 19 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 34,980 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்குட்பட்ட 3 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இணை நோய்கள் ஏதும் இல்லாத ஒருவர் உயிரிழந்தார்.
இன்று இறந்தவர்களில் திருவள்ளூரில் 4 பேரும், கோவையில் 3 பேரும், திருவண்ணாமலையில் 2 பேரும், அரியலூர், சென்னை, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, நாமக்கல், புதுக்கோட்டை, ராணிபேட்டை, சேலம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இறந்துள்ளனர்.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோான தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 166 ஆக இருந்த நிலையில் இன்று 162 ஆக குறைந்துள்ளது.
கோவையில் 239 பேருக்கும், ஈரோட்டில் 125 பேருக்கும், தஞ்சையில் 108 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நெல்லையில் 14 பேருக்கும், தென்காசியில் 4, தூத்துக்குடியில் 15 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.