June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இனறு 1,556 பேருக்கு கொரோனா; 18 போ் சாவு

1 min read

Corona for 1,556 people in Tamil Nadu today; 18 death

6.9.2021
தமிழகத்தில் புதிதாக 1,556 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 18 பேர் இறந்துள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று 1,556 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26,24,234 ஆக உயர்ந்துள்ளது.

18 பேர் சாவு

தமிழ்நாட்டில் இன்று மேலும் 18 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனா. இதையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,036 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை, தஞ்சையில் தலா 3 பேரும், செங்கல்பட்டு, சேலத்தல் தலா 2 பேரும், கோவை, கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருவள்ளூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் இறந்துள்ளனர்.

அதே சமயம் ஒரே நாளில் 1,564 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,72,942 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 16,256 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 1,55,609 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள மாவட்டங்கள்:-

கோவை – 206, சென்னை – 169, ஈரோடு – 96, செங்கல்பட்டு – 110, திருவள்ளூர் – 73

நெல்லையில் 9 பேருக்கும், தென்காசியில் 11 பேருக்கும், தூத்துக்குடியில் 13பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.