10, 11ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ்
1 min read
All 10th and 11th grade disabled students are all pass
11.9.2021
10, 11ஆம் வகுப்பு துணைத்தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பொதுத்தேர்வு
தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று அதிகரித்ததை தொடந்து, பிளஸ் 2 வரையிலான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டது. அவர்களின் முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிட வழிகாட்டுநெறிமுறைகள் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில், 10-ம்வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றவர்கள் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்குவது போல இருப்பதால், 10, 11ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.