June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் 1,639 பேருக்கு கொரோனா; 27 பேர் சாவு

1 min read

Corona for 1,639 people in Tamil Nadu; 27 deaths

11.9.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,631 -ல் இருந்து 1,639 ஆக சற்று அதிகரித்துள்ளது. 27 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா மீண்டும் வேகமெடுக்கிறது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,631இல் இருந்து 1,639 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 1,517 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,80,686 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

27 பேர் சாவு

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 16,399 ஆக உள்ளது. கொரோனாவால் மேலும் 27 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,146 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 21 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்தனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இணை நோய்கள் ஏதும் இல்லாத 2 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்குட்பட்ட 4 பேர் உயிரிழந்தனர். தஞ்சையில் 87 ஆக இருந்த கொரோனா பாதிப்பு 117 ஆக அதிகரித்துள்ளது. திருப்பூரில் 113 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 91 ஆக குறைந்துள்ளது.

நெல்லையில் 9 பேருக்கும், தென்காசியில் 8 பேருக்கும், தூத்துக்குடியில் 10 பேருக்கும் கொரேனா தொற்று கஊறதி செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.