கோவில் நிலம் ஆக்கிரமித்தால் கைது: சட்டமசோதா தாக்கல்
1 min read
Arrest for occupying temple land: Bill filed
13.9.2021
கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பவர்கள் மற்றும் அபகரிப்பவர்களை கைது செய்வதற்கான சட்ட மசோதாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.
கோவில் நிலம்
தமிழகத்தில் இதுவரை கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது சிவில் வழக்குகள் மட்டுமே போட முடியும். கைது நடவடிக்கைகள் எடுக்க முடியாது. இதனால் பல இடங்களில் கோயில் நிலங்களின் ஆக்கிரமிப்பு அதிகமாக நடைபெற்று வருவதைப் பார்க்க முடிகிறது.
இதனால் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஆக்கிரமிப்பு செய்தால் கைது செய்து ஜாமினில் விட முடியாத அளவுக்கு சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் கடும் குற்றம் செய்தவர்களாக கருதப்படுவார்கள் என்றும் சட்டமசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.