தமிழகத்தில் இன்று 1,591 பேருக்கு கொரோனா; 27 பேர் சாவு
1 min read
Corona for 1,591 people in Tamil Nadu today; 27 deaths
14.9.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,580 -ல் இருந்து 1,591 ஆக சற்று அதிகரித்துள்ளது. 27 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,537 பேர் குணமடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,52,296 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,591 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,37,010 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 901 பேர் ஆண்கள், 690 பேர் பெண்கள். இன் 1,537 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,85,244 ஆக உயர்ந்துள்ளது.
27 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 27 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். அதாவது கோவையில் 5 பேரும், சேலம், தஞ்சையில் தலா 3 பேரும், சென்னை, திருவள்ளூர், திருப்பூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாமக்கல், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இறந்துள்ளனர்.
இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,217 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 185 ஆக இருந்த நிலையில் இன்று (14ம் தேதி) 212 ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் 201 பேருக்கும், ஈரோட்டில் 128 பேருக்கும், தஞ்சையில் 119 பேருக்கும், செங்கல்பட்டில் 116 பேருக்கும், திருப்பூரில் 81 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் இன்று 13 பேருக்கும், தென்காசியல் 5 பேருக்கும், தூத்துக்குடியில் 9பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.