June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

பாலத்தை கடந்து சென்ற சரக்கு ரெயில் தடம்புரண்டது

1 min read

The freight train that crossed the bridge derailed

14.9.2021
ஒடிசாவில் கனமழையால் வலுவிழந்த பாலத்தை கடந்து சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியது.

ஒடிசாவில் மழை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஒடிசாவின் பத்ராக் மாவட்டத்தில் கரையை கடந்து, வடக்கு ஒடிசாவை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கடந்த 63 ஆண்டுகளில் இல்லாத அளவு. இங்கு, சாலைகள் மற்றும் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 13 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ரெயில் தடம் புரண்டது

இந்நிலையில் ஆங்குல் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தல்சார்-ஆங்குல் இடையே முக்கிய ஆற்றை இணைக்கும் ரெயில் பாலம் கனமழை காரணமாக வலுவிழந்து சேதமடைந்திருந்தது. அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. இதில் சரக்கு பெட்டிகள் ஒன்றுடன் சரிந்து விழுந்தது.மீட்பு பணிகள் நடக்கின்றன.
ஒடிசா மாநிலத்தில் கடந்த 87 ஆண்டுகளில் இவ்வளவு அதிகமான மழை பெய்திருப்பது இதுவே முதல் முறை என வானிலை ஆய்வு மைய தகவல்கள் கூறுகின்றன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.