June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் மேலும் 30,570 பேருக்கு கொரோனா; 431 பேர் சாவு

1 min read

Corona for a further 30,570 people in India; 431 deaths

16.9.2021

இந்தியாவில் மேலும் 30 ஆயிரத்து 570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. 431 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி, இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 30 ஆயிரத்து 570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாள் ( செவ்வாய் 25,404) ( புதன் 27,176) பாதிப்பை விட பாதிப்பை விட அதிகம் ஆகும்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 42 ஆயிரத்து 923 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 38 ஆயிரத்து 303 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 25 லட்சத்து 60 ஆயிரத்து 474 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு ஒரு நாளில் 431 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 43 ஆயிரத்து 928 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 76 கோடியே 57 லட்சத்து 17 ஆயிரத்து 137 ஆக அதிகரித்துள்ளது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 64 லட்சத்து 51 ஆயிரத்து 423 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.