இந்தியாவில் மேலும் 34,403 பேருக்கு கொரோனா; 320 பேர் சாவு
1 min read
Corona for a further 34,403 in India; 320 deaths
17/9/2021
இந்தியாவில் ஒருநாளில் மேலும் 34,403 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. 320 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 34 ஆயிரத்து 430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மூன்று நாள்கள் ( செவ்வாய் 25,404) ( புதன் 27,176) (வியாழன் 30,570) பாதிப்பை விட அதிகம் ஆகும்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 39 ஆயிரத்து 56 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 37 ஆயிரத்து 950 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 25 லட்சத்து 98 ஆயிரத்து 424 ஆக அதிகரித்துள்ளது.
320 பேர் சாவு
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு ஒருநாளில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 44 ஆயிரத்து 248 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 77.24 கோடியாக அதிகரித்துள்ளது.