May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,669 பேருக்கு கொரேனா; 17 பேர் சாவு

1 min read

Corona for 1,669 people in Tamil Nadu today; 17 deaths

17.8.2021
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,693-ல் இருந்து 1,669 ஆக சற்று குறைந்துள்ளது. 17 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,565 பேர் குணமடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,56,804 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,669 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,42,030 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 4,49,88,345 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 976 பேர் ஆண்கள், 693 பேர் பெண்கள்.
இன்று தமிழகத்தில் 1,565 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,89,899 ஆக உயர்ந்துள்ளது.

17 பேர் சாவு

இன்று 17 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,288ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 202 ஆக இருந்த நிலையில் இன்று (17ம் தேதி) 196 ஆக குறைந்துள்ளது.
கோவையில் 213 பேருக்கும், ஈரோட்டில் 132 பேருக்கும், செங்கல்பட்டில் 115 பேருக்கும், தஞ்சையில் 110 பேருக்கும் இன்று அதிகபட்சமாக கொரோனா தாக்கி உள்ளது.
நெல்லையில் 19 பேருக்கும், தென்காசியில் 7 பேருக்கும், தூத்துக்குடியில் 10 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.