இந்தியாவில் மேலும் 29,616 பேருக்கு கொரோனா; 290 பேர் சாவு
1 min read
Corona for a further 29,616 in India; 290 deaths
25.9.2021
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 29,616 பேராக குறைந்தது. 290 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சற்று ஏற்றம், இறக்கங்களை சந்தித்தி வருகிறது. இதன்படி கடந்த விழாக்கிழமை 31,923 பேருக்கும், வெள்ளிக்கிழமை 31,382 பேருக்கும் கொரோனா பாதிப்புகள் பதிவானது.
இந்த நிலையில், இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 29,616 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த 2 நாட்களை விட சற்று குறைந்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29 ஆயிரத்து 616 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (கேரளாவில் மட்டும் 17,983 பேர்) இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,36,24,419 ஆக அதிகரித்துள்ளது.
290 பேர் சாவு
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,46,658 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 28,046 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,28,76,319 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.78 % ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நாடுமுழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,01,442 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 84,89,29,160 பேருக்கு (இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 71,04,051 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 15,92,421 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 56,16,61,383 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.