June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,724 பேருக்கு கொரோனா்; 22 பேர் சாவு

1 min read

Corona to 1,724 people in Tamil Nadu today; 22 deaths

25.9.2021

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,733 -ல் இருந்து 1,724 ஆக சற்று குறைந்துள்ளது. 22 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,635 பேர் குணமடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் 1,56,490 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 1,724 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,55,572 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 985 பேர் ஆண்கள், 739 பேர் பெண்கள். 1,635 பேர் கொரோனா இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,02,833 ஆக உயர்ந்துள்ளது.

22 பேர் சாவு

தமிழகத்தில் இன்று 22 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,476 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 205 ஆக இருந்த நிலையில் இன்று (25ம் தேதி) 194 ஆக குறைந்துள்ளது.
கோவையில் இன்று 198 பேருக்கும், ஈரோட்டில் 121 பேருக்கும், செங்கல்பட்டில் 119 பேருக்கும், திருப்பூரில் 91 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் 22 பேருக்கும், தென்காசில் 3 பேருக்கும், தூத்துக்குடியில் 27 பேருக்கும் கொரோனாஉறுதி செய்யப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.