ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கண் அறுவை சிகிச்சை
1 min read
Eye surgery for President Ramnath Govind
25.9.2021
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் இன்று கண் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இதுதொடர்பாக ஜனாதிபதி மாளிகை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு ராணுவ ஆஸ்பத்திரியில் நேற்று கண்புரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. அதன் பின் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு இன்னொரு கண்ணில் கடந்த ஆகஸ்டு 19-ந் தேதி ராணுவ ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.