June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

அடித்தட்டு மக்களுக்கும் சென்று சேரும் அளவுக்கு சட்டத்தை எளிமையாக்க ரமணா வேண்டுகோள்

1 min read

Ramana appeals for simplification of laws to reach out to grassroots people

25/9/2021
அடித்தட்டு மக்களுக்கும் சென்று சேரும் அளவுக்கு சட்டங்கள் எளிமையாகப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசினார்.
என்.வி.ரமணா
 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று ஒடிசாவின் புரி ஜெகநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் விழா ஒன்றில் பேசிய அவர், நீதித்துறை, சட்டமன்றம், நிர்வாகம் ஆகியவற்றின் ஒத்துழைப்பு அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் சட்ட சேவை அமைப்பு கட்டிடம் திறக்கப்பட்டது. இதனைத் திறந்துவைக்க சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட ரமணா பேசியதாவது:-
சட்டங்கள்
 நீதித்துறை, அரசியல் சாசனம், அவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ஆகிய மூன்றும் இந்திய நாட்டின் மூன்று முக்கிய உறுப்புகள் போன்றவை. இவற்றை சரியாகப் பின்பற்றினால்தான் அனைவருக்கும் சமமான நீதி கிடைக்கும்.
நிகழ்கால நிதர்சனமான உண்மைகளை ஏற்றுக்கொள்வது போல நமது சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். மேலும், அடித்தட்டு மக்களுக்கும் சென்று சேரும் அளவுக்கு சட்டங்கள் எளிமையாகப்பட வேண்டும். அரசியல் சாசனத்தை சரியான பாதையில் கொண்டுசெல்ல சட்டத்துறை உதவ வேண்டும். இவ்வாறாக நாம் இந்திய சட்டத்துறைக்கு ஏற்பட்டுள்ள தடைகளைத் தகர்க்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.