June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் சாவு

1 min read

Corona for 1,694 people in Tamil Nadu today; 14 dead

26-9-2021

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,724 -ல் இருந்து 1,658 ஆக சற்று குறைந்துள்ளது. 14 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,658 பேர் குணமடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவல்கள் வருவாறு:-

தமிழகத்தில் 1,55,245 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தை சேர்ந்த 1,693 பேரும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவரையும் சேர்ந்து 1,694 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,57,266 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 994 பேர் ஆண்கள், 700 பேர் பெண்கள். இன்று 1,658 பேர் கொரோனா இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,04,491 ஆக உயர்ந்துள்ளது.

இன்று தமிழகத்தில் 14 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,490 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக இருந்த நிலையில் இன்று (26ம் தேதி) 190 ஆக குறைந்துள்ளது.

கோவை 196 பேருக்கும், செங்கல்பட்டியில் 118 பேருக்கும், ஈரோட்டில் 118 பேருக்கும், திருப்பூரில் 86 பேருக்கும், தஞ்சையில் 77 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
திருநெல்வேலியில் 25 பேருக்கும், தென்காசியில் 4 பேருக்கும், தூத்துக்குடியில் 71 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.