இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 86.01 கோடியாக உயர்வு
1 min read
The number of vaccines vaccinated in India so far has risen to 86.01 crore
27.9.2021
இந்தியாவில் இதுவரை 86.01 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தடுப்பூசி
இந்தியாவில் கொரோனாவில் இருந்து ஒட்டுமொத்த நாட்டையும் பாதுகாக்கும் நோக்கில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகளை மத்திய அரசு முடுக்கி விட்டு உள்ளது. இதற்காக உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக தடுப்பூசியை பெற்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் இதுவரை 86.01 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணிநேரத்தில் 38,18,362 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இன்று காலை 7 மணிவரை மொத்தம் 86,01,59,011 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
இதன்படி 18 முதல் 44 வயது வரையில் உள்ளவர்கள் – முதல் தவணை – 34,82,66,215, இரண்டாம் தவணை – 7,45,08,007
45 முதல் 59 வயது வரையில் உள்ளவர்கள்: முதல் தவணை – 15,64,81,731, இரண்டாம் தவணை – 7,39,69,804
60 வயதுக்கு மேல் உள்ளவர்கள்: முதல் தவணை – 9,97,47,469, இரண்டாம் தவணை – 5,47,95,828
சுகாதாரத்துறையில் உள்ளவர்கள்: முதல் தவணை – 1,03,71,418, இரண்டாம் தவணை – 88,35,377
முன்களப் பணியாளர்கள்: முதல் தவணை – 1,83,49,453, இரண்டாம் தவணை – 1,48,33,709.