தமிழகத்தில் 1,531 பேருக்கு கொரோனா; 23 பேர் சாவு
1 min read
Corona for 1,531 people in Tamil Nadu; 23 deaths
3.10.2021
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 1,578 -ல் இருந்து 1,531 ஆக சற்று குறைந்துள்ளது. 23 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,582 பேர் குணமடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
இது தொடர்பாக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழகத்தில் 1,50,410 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தை சேர்ந்த 1,530 பேருக்கும் கேரளாவை சேர்ந்த ஒருவர் உள்பட 1,531 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,68,495 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 4,74,49,936 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 891 பேர் ஆண்கள், 640 பேர் பெண்கள்.
தமிழகத்தில் 1,582 பேர் கொரோனா இருந்து மீண்டு வீடு திரும்பினார்கள். இதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,15,873 ஆக உயர்ந்துள்ளது.
23 பேர் சாவு
தமிழகத்தில் 23 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,650 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 188 ஆக இருந்த நிலையில் இன்று (அக்.3ம் தேதி) 184ஆக குறைந்துள்ளது.
கோவையில் 158 பேருக்கும், செங்கல்பட்டில் 105 பேருக்கும், தஞ்சையில் 93 பேருக்கும், ஈரோட்டில் 91 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் 21 பேருக்கும், தென்காசியில் ஒருவருக்கும், தூத்துக்குடியில் 13 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.