June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைது; தாக்குதல் சதி முறியடிப்பு

1 min read

Pakistani terrorist arrested in Delhi; Attack plot thwarted

12/10/2021
டெல்லியில், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி ஒருவனை சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இதன் மூலம், பண்டிகை நாட்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அவனின் சதி முறியடிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியின் சாஷ்திரி நகரில் போலி அடையாள அட்டையுடன் வசித்து வந்த பாகிஸ்தானை சேர்ந்த முகமது அஸ்ரப் என்ற அலி என்பவனை லட்சுமி நகர் ரமேஷ் பூங்காவில் போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், 2 பிஸ்டல்கள், கையெறி குண்டு, தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
டெல்லியில் கைது செய்யப்பட்ட முகமது அஸ்ரப், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவன் என்பது தெரியவந்துள்ளது. பல பிரிவுகளில் அவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.