June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,259 பேருக்கு கொரோனா; 20 பேர் சாவு

1 min read

Corona for 1,259 people in Tamil Nadu today; 20 dead

14.10.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,280 -ல் இருந்து 1,259 ஆக சற்று குறைந்துள்ளது. 20 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,438 பேர் குணமடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

இது தொடர்பாக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழகத்தில் 1,37,423 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,259 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,83,396 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 4,90,17,492 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 719 பேர் ஆண்கள், 540 பேர் பெண்கள். இன்று 1,438 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,32,092 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தி்ல் இன்று 20 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,853 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 173 ஆக இருந்த நிலையில் இன்று 163 ஆக குறைந்துள்ளது.
கோவையில் இன்று 143 பேருக்கும் செங்கல்பட்டில் 95 பேருக்கும், ஈரோட்டில் 79 பேருக்கும் கொரோனா உறுதி யெ்யப்டப்டு உள்ளது.
நெல்லையில் 21 பேருக்கும், தென்காசியில் ஒருவருக்கும், தூத்துக்குடியி்ல் 11 பேருக்கும் கொரோனா இன்று கண்டறியப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.