தூத்துக்குடியில்: போலீசாருடன் நடந்த மோதலில் ரவுடி துரைமுருகன் சுட்டுக்கொலை
1 min read
Thoothukudi: Rowdy Duraimurugan shot dead in a clash with police
15.10.2021
15.10.2021
பல்வேறு குற்றச் செயலில் தொடர்புடைய குற்றவாளி துரைமுருகன், போலீஸ் இன்ஸ்பெக்டரை தாக்க முயன்றபோது சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
ரவுடி துரைமுருகன்
தூத்துக்குடியில் 18 வழக்குகளில் தொடர்புடைய துரைமுருகன் என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் பதுங்கி இருக்கும் இடம் குறித்தது உளவுத்துறை மூலம் அறிந்த போலீசார் முள்ளாக்காடு பகுதிக்கு சென்றனர்.
அங்கு துரைமுருகன் போலீசார் மீது தாக்குதல் நடத்தி உள்ளார். இதை தொடர்ந்து போலீசார் அவரை சுட்டு கொன்று உள்ளனர். துரைமுருகன் மீது 7 கொலை வழக்குகள் உள்பட 18 வழக்குகள் உள்ளன.