தமிழகத்தில் 1,233 பேருக்கு கொரோனா; 15 பேர் சாவு
1 min read
Corona for 1,233 people in Tamil Nadu; 15 deaths
16.10.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1245 -ல் இருந்து 1,233 ஆக சற்று குறைந்துள்ளது.15 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,434 பேர் குணமடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
இது தொடர்பாக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட தகவல்ககள் வருமாறு:-
தமிழகத்தில் 1,30,251 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,233 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,85,874 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 734 பேர் ஆண்கள், 499 பேர் பெண்கள்.
இன்று 1,434 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார்கள். இதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,34,968 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 15 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,884 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 167 ஆக இருந்த நிலையில் இன்று 160 ஆக குறைந்துள்ளது.
கோவையில் 136 பேருக்கும், ஈரோட்டில் 97 பேருக்கும், செங்கல்பட்டில் 90 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் 16 பேருக்கும், தென்காசியில் 3 பேருக்கும், தூத்துக்குடியில் 13 பேருக்கும் கொரோனா இன்று கண்டறியப்பட்டு உள்ளது.
மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.