5 ஆண்டுகளாக மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை இறக்கி வைத்திருக்கிறேன்: சசிகலா பேட்டி
1 min read
I have unloaded the burden that had been stored in my mind for 5 years: Sasikala interview
16.10.2021
5 ஆண்டுகளாக மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்திருக்கிறேன் என்று சசிகலா கூறினார்.
சசிகலா
மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., அண்ணா நினைவிடங்களில் சசிகலா மரியாதை செலுத்தினார்.
கொரோனா பரவல் கட்டுக்குள் அடங்கியதும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திப்பேன் என்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு அங்கிருந்து எனது அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்வேன் என்றும் சசிகலா தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., அண்ணா நினைவிடங்களில் சசிகலா மரியாதை செலுத்தினார்.
சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்து மெரினா கடற்கரைக்கு புறப்பட்ட சசிகலாவுக்கு ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.
பேட்டி
மரியாதை செலுத்திய பின்னர், ‘‘கடந்த 5 ஆண்டுகளாக என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்திருக்கிறேன் . ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஏன் தாமதமாக வந்தேன் என்று அனைவருக்கும் தெரியும்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தமிழக மக்களுக்காகவே வாழ்ந்தனர். இருவரும் அதிமுக-வை காப்பாற்றுவார்கள்’’ என்றார்.