தமிழகத்தில் இன்று 1,218 பேருக்கு கொரோனா; 15 பேர் சாவு
1 min read
Corona for 1,218 people in Tamil Nadu today; 15 deaths
17.10.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,233 -ல் இருந்து 1,218 ஆக சற்று குறைந்துள்ளது. 15 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,411 பேர் குணமடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
இது தொடர்பாக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,28,313 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,218 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,87,092 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 714 பேர் ஆண்கள், 504 பேர் பெண்கள். இன்று 1,411 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,36,379 ஆக உயர்ந்துள்ளது.
15 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 15 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,899 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக இருந்த நிலையில் இன்று 156 ஆக குறைந்துள்ளது.
கோவையில் இன்று 132 பேருக்கும், ஈரோட்டில் 90 பேருக்கும், செங்கல்பட்டில் 88 பேருக்கும், திருப்பூரில் 73 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
நெல்லையில் இன்று 20 பேருக்கும், தென்காசியில் 2 பேருக்கும், தூத்துக்குடியில் 12 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.