June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

மடப்புரம் அஜித்குமாருக்கு கஞ்சா கொடுத்து தாக்குதல்

1 min read

Madapuram Ajith Kumar attacked with ganja

3.7.2025
விசாரணையின் போது உயிரிழந்த மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமாருக்கு போலீசார் கஞ்சா கொடுத்து தாக்கினர் என அவரது உறவினர் குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக அஜித்குமாரின் உறவினரான மனோஜ் பாபு கூறியதாவது: அவரிடம் பேசிய போது, கஞ்சா வாடை வந்தது. கஞ்சா குடிக்க வைத்து தான் அடித்தனர். கஞ்சா வாடையை தெரிந்து கொண்டு போதையில் உள்ளாரா எனக்கேட்டேன். இல்லை என மறுத்தனர். நீங்கள் யார் என கேட்ட பிறகு அதற்கு பதில் கூறிய உடன் என்னை தள்ளி போகுமாறு கூறினர்.
அஜித்குமார் தண்ணீர் கேட்ட போது கொடுக்க மறுத்தனர். பிறகு கொடுத்த போது மிளகாய்ப்பொடி கலந்து கொடுத்தனர். முகத்திலும் தடவினர். இதனை நானும் பார்த்தேன்.

பார்த்தேன் எனக்கூறியதை விட அருகில் தான் இருந்தேன். அனைத்தும் மாட்டுக் கொட்டகையில் தான் நடந்தது. முதலுதவி செய்தேன். அவரது உயிர் போகும் வரை அருகில் தான் இருந்தேன். அவரது நாடித்துடிப்பை சோதனை செய்த போது நாடித்துடிப்பு இல்லை. மார்பில் கைவைத்து பார்த்தேன். அப்போதும் துடிப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். தற்போது இவரின் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *