இந்தியாவில் புதிதாக 13,058 பேருக்கு கொரோனா; 164 பேர் சாவு
1 min read
Corona for 13,058 newcomers in India; 164 deaths
19.10.2021
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. புதிதாக 13,058 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 164 பேர் இறந்துள்ளனர்.
கொரோனா
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை தொடர்ந்து வீழ்ச்சிப்பாதையில் செல்கிறது. தினசரி பாதிப்பு தொடர்ந்து சரிவு அடைந்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 13,058 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 19,470 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 164 பேர் தொற்று பாதிப்புக்கு பலியாகியுள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 94 ஆயிரத்து 373 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 83 ஆயிரத்து 118 ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 34 லட்சத்து 58 ஆயிரத்து 801 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 52 ஆயிரத்து 454 ஆக அதிகரித்துள்ளது.
தடுப்பூசி
நாட்டில் நேற்று ஒருநாளில் மட்டும் 79 லட்சத்து 74 ஆயிரத்து 435 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 98,67,69,411 கோடி ஆக அதிகரித்துள்ளது.