இந்தியாவில் மேலும் 18,454 பேருக்கு புதிதாக கொரோனா; 160 பேர் சாவு
1 min read
Corona new to 18,454 more in India; 160 deaths
21.10.2021
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 18,454 பேருக்கு புதிதாக கொரோனா பதிவாகி உள்ளது. மேலும் 160 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா 2-வது அலை
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை தொடர்ந்து வீழ்ச்சிப்பாதையில் செல்கிறது. தினசரி பாதிப்பு தொடர்ந்து சரிவு அடைந்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் இன்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் 18,454 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 17,561 பேர் குணம் அடைந்துள்ளனர்.
160 பேர் சாவு
ஒரே நாளில் 160 பேர் கொரோனா பாதிப்புக்கு பலியாகியுள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,41,27,450 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 78 ஆயிரத்து 831 ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3,34,95,808 – ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,52,811ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் நேற்று ஒருநாளில் மட்டும் 48,08,665 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.