June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,152 பேருக்கு கொரோனா; 19 பேர் சாவு

1 min read

Corona for 1,152 people in Tamil Nadu today; 19 deaths

22.10.2021

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,164 ல் இருந்து 1,152 ஆக சற்று குறைந்துள்ளது. 19 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,392 பேர் குணமடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,29,573 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,92,949 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 664 பேர் ஆண்கள், 488 பேர் பெண்கள். இன்று 1,392 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார்கள். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,43,431 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 19 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 152 ஆக இருந்த நிலையில் இன்று 147 ஆக குறைந்துள்ளது.
கோவையில் 140 பேருக்கும், செங்கல்பட்டில் 93 பேருக்கும், ஈரோட்டில் 83 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
நெல்லையில் 13 பேருக்கும், தென்காசியில் 3 பேருக்கும், தூத்துக்குடியில் 16 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.