கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் தள்ளி வைப்பு; அதிமுக போராட்டம
1 min read
Postponement of indirect election for the post of Karur District Panchayat Deputy Chairman; AIADMK struggle
22.10.2021-
கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் தள்ளி வைத்ததால் அதிமுகவினர் தேர்தல் அலுவலரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் 50க்கும் மேற்பட்டோர் கைது.
துணைத் தலைவர் தேர்தல்
கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கான ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில் திமுகவை சேர்ந்த உறுப்பினர் வெற்றி பெற்ற நிலையில் இன்ற தமிழகம் முழுவதும் மறைமுக தேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெறும் அறிவிக்கப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் 8 அதிமுக உறுப்பினர்கள் உள்ளனர் 4 திமுக உறுப்பினர்களுக்கு உள்ளனர்.
ஒத்தி வைப்பு
இந்த நிலையில் கூட்டம் ஆரம்பித்து பதினைந்து நிமிடத்தில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது, என அதிகாரிகள் கூறியதால் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள், மாவட்ட இயக்குனர் மந்திராசலம் வாகனத்தை மறித்து முறையிட்டனர்.
இதனால் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர், தேர்தலை தள்ளி வைக்க அதற்கு என்ன காரணம் என என்று போலீசாரிடம் முறையிட்டனர்.
இதனைத் தொடர்ந்த முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் என ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் கைதானார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்ட நிலையில் அங்கு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.