இந்தியாவில் மேலும் 16,326 பேருக்கு கொரோனா; 666 பேர் பலி
1 min read
Corona for another 16,326 in India; 666 killed
23/10/2021
இந்தியாவில் ஒரு நாளில் புதிதாக 16,326 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 666 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இதன்படி நேற்று 18,454 பேருக்கும் வைரஸ் பாதிப்புகள் பதிவான நிலையில், இன்று காலையில் புதிதாக 16,326 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 ஆயிரத்து 326 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதில் கேரளாவில் மட்டும் 9,361 பேர்.
இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,41,59,562 ஆக அதிகரித்துள்ளது.
666 பேர் சாவு
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 666 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,53,708 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.33 சதவீதமாக உள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 17,677 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,30,14,898 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 98.16 சதவீதமாக உள்ளது.
மேலும் நாடுமுழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1,73,728 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 101.30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசோதனை
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 13,64,681 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 59,84,31,162 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் பலி அதிகரிப்பு ஏன்?
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 666 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக இந்திய சுகாதாத்துறை விளக்கம் அளித்துள்ளது.
அந்த விளக்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கேரள மாநிலத்தில் நேற்று முன்தினம் புதிதாக 9,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் 99 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். அதில் கூடுதலாக, 292 இறப்புகள் (ஜூன் 14, 2020 வரை பதிவாகியுள்ளன, ஆனால் போதுமான ஆவணங்கள் இல்லாததால் பதிவு செய்யப்படவில்லை) மற்றும் 172 இறப்புகள் (ஒன்றிய அரசின் புதிய வழிகாட்டுதல்களின்படி பதிவாகியுள்ளன) மொத்த எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டன.
இதன்படி மொத்த இறப்பு எண்ணிக்கை 27,765 ஆக உயர்ந்ததாக கேரள சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. கேரள மாநிலத்தின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் மேலும் 291 இறப்புகள் சேர்க்கப்பட்ட நிலையில், தினசரி கொரோனா இறப்புகளில் (666) இந்தியா நேற்று ஒரு பெரிய அதிகரிப்பை பதிவு செய்தது. இதன்மூலம் இந்தியாவில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,53,708 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டு உ்ளளது.