June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

“100 நாள் திட்ட நிதி ஒதுக்க வேண்டும்”; பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

1 min read

“Allocate 100 day plan funds”; MK Stalin’s letter to the Prime Minister

1/11/2021
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

கடிதம்

பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டிருக்கும் தாமதத்தால் பல ஆயிரக்கணக்கான கிராமப்புற குடும்பங்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளன. 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 2021ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி வரை ரூ.1,178.12 கோடியை தமிழகத்துக்கு உடனடியாக விடுவிக்க வேண்டும்.
ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் பல கிராமப்புற குடும்பங்கள் நகர்ப்புறங்களை நோக்கி இடம்பெயரும் நிலை ஏற்படும்.
பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, தொழிலாளர்களுக்கு உரியத் தொகையை வழங்கும் வகையில், தமிழகத்துக்கு உடனடியாக தொகையை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.