June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து – மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு

1 min read

Cancellation of reservation for Vanni – Government of Tamil Nadu decides to appeal

1.11.2021
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்த மதுரை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மேல் முறையீடு

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்தான நிலையில் அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்த மதுரை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில், வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து குறித்த மதுரை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து என்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது எனவும் மதுரைஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.