கடனாநதி, ராமநதி அணைகள் நிரம்புகிறது
1 min read
Kadananadi and Ramanadi dams are filling up
2.11.2021
தமிழ்நாட்டில் 14,138 ஏரிகளில் 2,027 ஏரி முழுமையாக நிரம்பியது. கடனாநதி, ராமநதி அணைகள் நிரம்புகிறது.
ஏரிகள்
தமிழ்நாட்டில் 14,138 ஏரிகள் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக அதிகமாக 2040 ஏரிகள் உள்ளன. இதில் 273 ஏரிகள் முழுமையாக நிரம்பி விட்டது. 915 ஏரிகள் 80 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை நிரம்பி இருக்கிறது. 530 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேல் நிரம்பிவிட்டன.
மதுரை மாவட்டத்தில் உள்ள 1340 ஏரிகளில் 445 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளது. 327 ஏரிகள் 80 சதவீதத்துக்கு மேல் நிரம்பி விட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1,131 ஏரிகளில் 28 ஏரிகள் முழுவதுமாக நிரம்பியுள்ளது. 390 ஏரிகள் 80 சதவீதம் அளவுக்கு நிரம்பியுள்ளன.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 1,460 ஏரிகளில் 39 ஏரிகள் முழுவதுமாக நிரம்பி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 781 ஏரிகளில் 109 ஏரிகள் முழுவதும் நிரம்பியுள்ளன. 66 ஏரிகள் 80 சதவீதம் அளவுக்கு நிரம்பியுள்ளன. 124 ஏரிகள் 50 சதவீதம் வரை நிரம்பியுள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் உள்ள 543 ஏரிகளில் 215 ஏரிகள் நிரம்பிவிட்டன. 76 ஏரிகள் 80 சதவீதம் அளவுக்கு நிரம்பியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 174 ஏரிகளில் 31 ஏரிகளில் மட்டுமே தண்ணீர் நிரம்பியுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 640 ஏரிகளில் 317 ஏரிகள் ஓரளவு நிரம்பி உள்ளன. தமிழகத்தில் மொத்தம் உள்ள 14138 ஏரி களில் 2027 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 342 ஏரிகள் உள்ளன. இங்கு ஒரு ஏரி கூட இன்னும் முழுமையாக நிரம்பவில்லை. இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 30 ஏரிகளில் ஒரு ஏரி கூட முழுமையாக நிரம்பவில்லை.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 641 ஏரிகளிலும் இதேநிலை தான். ஒரு ஏரிகூட இன்னும் நிரம்பவில்லை. கரூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும் ஏரிகள் நிரம்பாமல் உள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணையில் 118 அடிக்கு 82 அடி அளவு தண்ணீர் உள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி, ராமாநதி, குண்டாறு, கருப்பா நதி அணைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளிலும் 80 சதவீத அளவுக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. இதேபோல் தமிழ்நாட்டில் உள்ள 90 நீர் தேக்கங்களிலும் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது.