June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 973 பேருக்கு கொரோனா; 21 பேர் சாவு

1 min read

Today corona affected 973 person and death 21 in Tamil Nadu

2.11.2021

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 990 -ல் இருந்து 973 ஆக சற்று குறைந்துள்ளது. 21 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,114 பேர் குணமடைந்து உள்ளனர். நெல்லை, தென்காசியில் தலா ஒருவர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,15,219 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 973 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27,04,586 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 5,13,94,614 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 567 பேர் ஆண்கள், 406 பேர் பெண்கள். இன்று 1,114 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார்கள. இதைத் தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,57,282 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 21 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,157 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக இருந்த நிலையில் இன்று (நவ.2 ம் தேதி) 109 ஆக குறைந்துள்ளது.
கோவையில்114 பேருக்கும், செங்கல்பட்டில் 84 பேருக்கும் ஈரோட்டில் 71 பேருக்கும், நெல்லையில் 12 பேருக்கும் தென்காசியல் 2 பேருக்கும், தூத்துக்குடியில் 9 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. நெல்லை, தென்காசியில் தலா ஒருவர் இன்று கொரோனாவுக்கு ஒருவர் இறந்துள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு நெல்லை, தென்காசியில் கொரோனா இறப்பு ஏற்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.