June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் 973 பேருக்கு கொரோனா; 19 பேர் சாவு

1 min read

Corona for 973 people in Tamil Nadu; 19 deaths

3.11.2021

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 973 ல் இருந்து 962ஆக சற்று குறைந்துள்ளது. 19 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,078பேர் குணமடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக இன்று மாலை சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழகத்தில் 1,15,237 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27,05,548 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 5,15,09,851 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 570 பேர் ஆண்கள், 392 பேர் பெண்கள். தமிழகத்தில் இன்று 1,078 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,58,360 ஆக உயர்ந்துள்ளது.

19 பேர் சாவு

தமிழகத்தில் இன்று 19 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,176 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 109 ஆக இருந்த நிலையில் இன்று (நவ.3 ம் தேதி) 105 ஆக குறைந்துள்ளது.
கோவையில் இன்று 109 பேருக்கும், செங்கல்பட்டில் 82 பேருக்கும், ஈரோட்டில் 69 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
நெல்லை, தூத்துக்குடியில் தலா ரூ.10 பேருக்கும், தென்காசியில் 6 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.