தமிழக ஊராட்சித்துறை செயலாளராக அமுதா நியமனம்
1 min read
Amutha appointed Tamil Nadu Panchayat Secretary
6.11.2021
தமிழக ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளராக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளராக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் பணியில் இருந்த அமுதா ஐஏஸ் அண்மையில் மாநில பணிக்கு திரும்பிய நிலையில் அவருக்கு புதிதாக பதவி வழங்கப்பட்டுள்ளது.
தொழிற்துறையின் கூடுதல் தலைமை செயலாளராக கிருஷ்ணன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழிற்துறை முதன்மை செயலாளராக இருந்த முருகானந்தம் நிதித்துறை முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.
மொத்தம் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-
*ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளராக அமுதா ஐ.ஏ.எஸ் நியமனம்
*தொழில்துறையின் முதன்மை செயலாளராக இருந்த முருகானந்தம் நிதித்துறை முதன்மை செயலாளராக நியமனம்.
*தொழில்துறையின் கூடுதல் முதன்மைசெயலாளராக கிருஷ்ணன் நியமனம்
*ஊரகவளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் முதன்மை செயலாளராக இருந்த கோபால், போக்குவரத்துறை முதன்மை செயலாளராக நியமனம்.
*பொதுத்துறை கூடுதல் முதன்மை செயலாளராக இருந்த சந்தீப் சாக்ஷனோ, நீர்வளத்துறை கூடுதல் முதன்மை செயலாளராக நியமனம்.
*போக்குவரத்து துறை கூடுதல் முதன்மை செயலாளராக இருந்த தயானந்த் கட்டாரியா, பொதுத்துறை கூடுதல் முதன்மை செயலாளராக நியமனம்.
*விளையாட்டு மேம்பாடு முதன்மைசெயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனா, எரிசக்தி துறை செயலாளராக நியமனம்
*எரிசக்தி துறை செயலாளராக இருந்த தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறிதுறை முதன்மை செயலாளராக நியமனம்.
*கைத்தறி துறை முதன்மை செயலாளராக இருந்த செல்வி அபூர்வா இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மை செயலாளராக நியமனம்.
*கைத்தறி துறை முதன்மை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ், நில சீர்திருத்த துறை முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.