June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 862 பேருக்கு கொரேனா; 10 பேர் சாவு

1 min read

Corona for 862 people in Tamil Nadu today; 10 people died

6.11.2021

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 875 இருந்து 862 ஆக சற்று குறைந்துள்ளது. 10 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,009 பேர் குணமடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் 1,01,023 மாதிரிகள் கொரோனா
பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 862 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27,08,230 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 521 பேர் ஆண்கள், 341 பேர் பெண்கள். இன்று 1,009 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார்கள். இதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,61,428 ஆக உயர்ந்துள்ளது.

10 பேர் சாவு

தமிழகத்தில் இன்று 10 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,214 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 106 ஆக இருந்த நிலையில் இன்று (நவ.6 ம் தேதி) 122 ஆக அதிகரித்துள்ளது.

கோவையில் 99 பேரும், செங்கல்பட்டில் 79 பேரும், ஈரோட்டில் 67 பேரும், திருப்பூரில் 60 பேரும் இன்று கொரோனா தாக்குதலுக்கு உள்ளானார்கள்.
நெல்லையில் 8 பேருக்கும், தென்காசியில் 2 பேருக்கும், தூத்துக்குடியில் 7 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.