இந்தியாவில் மேலும் 10,929 பேருக்கு கொரோனா; 392 பேர் சாவு
1 min read
Corona for another 10,929 in India; 392 deaths
6/11/2021
இந்தியாவில் நேற்று காலையில் புதிதாக 10,929 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 392 பேர் இறந்தனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்து 929 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று பதிவான 12 ஆயிரத்து 729-ஐ விட சற்று குறைவாகும். இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 43 லட்சத்து 44 ஆயிரத்து 683 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 12 ஆயிரத்து 509 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 37 லட்சத்து 37 ஆயிரத்து 468 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 46 ஆயிரத்து 950 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
392 பேர் சாவு
ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 392 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 60 ஆயிரத்து 265 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 20 லட்சத்து 75 ஆயிரத்து 942 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் பொதுமக்களுக்கு இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 107 கோடியே 92 லட்சத்து 19 ஆயிரத்து 546 ஆக அதிகரித்துள்ளது.